Tuesday, February 25, 2014

இந்தியாவின் டீசல் தன்மை - கொடூரம்

நண்பர்களுக்கு வணக்கம் ..

இந்த வாரம் ஒரு மற்றும் ஒரு புதிய அதிர்ச்சி தகவலுடன் வந்து இருக்கிறேன்.

#இந்தியாவில் பயன்படுத்தப்படும் டீசல் அதிக தீப்பற்றும் தன்மையுடன் இருக்கிறது. என்ன தீப்பற்றும் தன்மை????

மற்ற நாடுகளை விட இந்தியாவில் பயன்படுத்தும் டீசல் தான் மிக விரைவில் தீப்பற்றும் தன்மையும் அதிக புகையும் கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்ற நாடுகளில் “Flame Flash Point level 5 to 8" வரை இருக்கிறது. இந்தியாவிலோ Flame Flash Point level 1 to 4 -க்குள் இருக்கிறது

இதற்க்குக் காரணம் “நாப்தல்” என்ற இனைபொருள் டீசல் தயாரிப்பில் அதிக அளவில் சேர்க்கப் படுவதே.
தனியார் இந்திய எண்ணை தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களின் சுய லாபத்திற்க்காக இப்படி செய்கிறது.

இதனால் மனிதருக்கும் வாகனங்களுக்கும் ஏற்ப்படும் விளைவுகள்????
#வாகனங்களில் இது போல அதிக கரித்தன்மை கொண்ட எரிபொருள் பயன்படுத்துவதால் சீக்கிரமே உங்கள் வாகனத்தின் எஞ்சின் பாழாகும்.
#குறிப்பாக ஒரு வாகனம் 5 வருடங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் என்றால்..?
இந்த டீசல் போடுவதால் அதிகபட்சம் 2 வருடங்களுக்குள் எஞ்சின் பாழாகி உங்களுக்கு செலவுவைக்கும்.
#இந்த எரிபொருள் தான் இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் பெரும்பாலான பேருந்துகள் விபத்து ஏற்ப்பட்ட உடன் எளிதில் தீப்பிடித்து அதிக உயிர்கள் பலியாகின்றது.
சமீபத்தில் ஆந்திராவில் சொகுசுபேருந்து தீப்பிடித்து 100-க்கும் மேற்பட்டோர் பலியானது செய்திகளில் பார்த்தோம்..
இதில் வெட்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் இந்த டீசல் விவகாரம் மத்திய அரசுக்கு தெரியும்.
எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் சுய லாபத்திற்காக மனித உயிகளோடு விளையாடி வருகிறது.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல். 
பொங்கும் ஊழல் புதுமை ஊழல் என
தினம் தினம் புது புது ஊழல்கள்.
யப்பா முடியல சாமீ என்று மக்களே வெறுக்கும் அளவுக்கு செய்துவிட்டது இந்த பாழாய்போன மத்திய அரசு.

சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்
உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள் 

No comments:

Post a Comment