Thursday, May 15, 2014


இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி


இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகறது. ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும்பிளாஸ்டிக் ,இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
பல நாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனைதெரியுமா? 80.
சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.

 1 .அனால்ஜின்( Analgin)
பயன்பாடு - வலிநிவாரணி
பக்கவிளைவு - எலும்புமஜ்ஜைசீர்கேடு
2 .நிமிசுலைட் (Nimisulide)
பயன்பாடு - வலிநிவாரணிமற்றும்காய்ச்சல்
பக்கவிளைவு - கல்லீரல்செயல்இழப்பு
3 .பினைல்ப்ரோபநோலமைன்( phenylpropanolamine )
பயன்பாடு - சளிமற்றும்மூக்குஒழுகுதல்
பக்கவிளைவு - மூளைக்குச்செல்லும்ரத்தநாளங்களில்ஏற்படும்திடீர்அடைப்பால்சுயநினைவுஇழத்தல்
4 .சிசாபிரைடு( cisapride )
பயன்பாடு - மலச்சிக்கல்மற்றும்அதிகஅமிலம்சுரத்தலைகட்டுப்படுத்து
பக்கவிளைவு - இதயத்துடிப்புசீர்கேடு
5 .குயிநோடக்ளர் (quinodochlor )
பயன்பாடு -வயிற்றுப்போக்குகட்டுப்படுத்துதல்
பக்கவிளைவு - கண்பார்வைபாதிப்பு
6 .பியுரசொளிடன் (Furazolidone )
பயன்பாடு - வயிற்றுப்போக்குகட்டுப்படுத்துதல்
பக்கவிளைவு – புற்றுநோய்
7 .நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
பயன்பாடு - கிருமிகளைஅழித்தல்
பக்கவிளைவு – புற்றுநோய்
8 .ஆக்சிபென்பியுட்டசொன்( Oxyphenbutozone )
பயன்பாடு - வலிநிவாரணி
பக்கவிளைவு - எலும்புமஜ்ஜைசீர்கேடு
9 .பைப்பரசின்( Piperazine )
பயன்பாடு - வயிற்றுப்புழுக்களைஅழித்தல்
பக்கவிளைவு - நரம்புச்சிதைவு
10 .பினப்தலின் (Phenophthalein )
பயன்பாடு - மலமிலக்கி
பக்கவிளைவு – புற்றுநோய்
சரி, இந்தபத்துமருந்துகளின்விற்பனைப்பெயர்கள்தெரியணும்இல்லையா
1 .அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
2 .நிமிசுலைட் -Monogesic,Nlid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 .பினைல்ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
4 .சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 .பியுரசொளிடன் - Furoxone
6 .பைப்பரசின் -Piperazine citrate
7 .குயிநோடக்ளர் - Enteroquinol

இதைத் தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நாமே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்கிறோம். நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்கவிளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக் கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இல்லாவிட்டால் குலசாமிக்கு விரதம் இருந்து மொட்டை போட்டு பொங்கல் வைச்சால் போதும் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் ,மருத்துவர்களுமேதான்.


மேலே இருக்கும் இந்த மருந்தானது மிகச்சிறந்த வலி நிவாரணியாக கருதப்பட்டு மருந்து விற்பனையில் சக்கைப் போடுபோட்டது, நம்ம வியாபாரிகளை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? காதலை மையப்படுத்தி ஒரு சினிமா வெற்றி பெற்றால் போதும், உடனே வரிசையாக காதல் படமா எடுப்பார்கள் என்று அதேபோல் இந்த மருந்தை எல்லா நிறுவனங்களும் விற்பனை செய்தன பின்புதான் தெரிந்தது. இதன் பக்க விளைவு இதைத் தொடர்ச்சியாக எடுத்து கொண்டால் இதய நோய்வரும் என்று வந்தது வினை, 2004-ம் ஆண்டு இந்த மருந்தை விற்பனை செய்ய கூடாது என்று தடை கூட வந்தது.
ஆனால் மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தை அதிகமாக உற்பத்தி செய்து விற்பனைக்கு வைத்துள்ளன என்ன செய்வ தென்று முழிபிதுங்கி, தடைசெய்த 2004 ம் ஆண்டில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரின் தந்தையிடம் 200 கோடி கொடுத்தன ஒரு ஆறு மாதம் விற்பனை செய்த சம்பாதித்தன மருந்து நிறுவனங்கள். மருந்தை உண்டவன் செத்தானா இருக்கிறானா என்று தெரியவில்லை.

(இந்த தகவல் வலைப்பதில் இருந்தும் மருத்துவ இதழ்களில் இருந்தும் எடுக்கப் பட்டது”
“உங்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றன”


கோவங்களுடன்.
உங்கள் பாமரன்..

Saturday, March 15, 2014

  • திருக்குறள்சுவையானதகவல்கள்:

  • திருக்குறளில்ஐம்பதுக்கும்குறைவானவடசொற்களேஉள்ளன

  • திருக்குறளில்தமிழ்என்றசொல்பயன்படுத்தப்படவில்லை.

  • திருக்குறள்முதன்முதலில்அச்சிடப்பட்ட ஆண்டு-1812

  • திருக்குறளின்முதல்பெயர்
    - முப்பால்

  • திருக்குறளில்உள்ளஅதிகாரங்கள்- 133

  • திருக்குறள்அறத்துப்பாலில்உள்ள குறட்பாக்கள்-380

  • திருக்குறள்பொருட்பாலில்உள்ள குறட்பாக்கள்-700

  • திருக்குறள்காமத்துப்பாலில்உள்ள குறட்பாக்கள்-250

  • திருக்குறளில்உள்ளமொத்த குறட்பாக்கள்-1330

  • திருக்குறள்அகரத்தில்தொடங்கினகரத்தில்முடிகிறது.

  • ஒவ்வொருகுறளும்இரண்டுஅடிகளால், ஏழுசீர்களைகொண்டது.

  • திருக்குறளில்உள்ள சொற்கள்-14,000

  • திருக்குறளில்உள்ளமொத்தஎழுத்துக்கள்- 42,194

  • திருக்குறளில்தமிழ்எழுத்துக்கள் 247-இல், 37 
  • எழுத்துக்கள்மட்டும்இடம்பெறவில்லை

  • திருக்குறளில்இடம்பெறும்இருமலர்கள்-அனிச்சம், குவளை

  • திருக்குறளில்இடம்பெறும்ஒரேபழம்- நெருஞ்சிப்பழம்

  • திருக்குறளில்இடம்பெறும்ஒரேவிதை- குன்றிமணி

  • திருக்குறளில்பயன்படுத்தப்படாதஒரேஉயிரெழுத்து-ஒள

  • திருக்குறளில்இருமுறைவரும்ஒரேஅதிகாரம்- குறிப்பறிதல்

  • திருக்குறளில்இடம்பெற்றஇரண்டுமரங்கள்- பனை, மூங்கில்

  • திருக்குறளில்அதிகம்பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

  • திருக்குறளில்ஒருமுறைமட்டும்பயன்படுத்தப்பட்டஇருஎழுத்துக்கள்-
  • ளீ,

  • திருக்குறளில்இடம்பெறாதஇருசொற்கள்- தமிழ், கடவுள்

  • திருக்குறள்மூலத்தைமுதன்முதலில்அச்சிட்டவர்

  • தஞ்சைஞானப்பிரகாசர்

  • திருக்குறளுக்குமுதன்முதலில்உரைஎழுதியவர்-மணக்குடவர்

  • திருக்குறளைமுதன்முதலில்ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர்

  • ஜி.யு,போப்

  • திருக்குறளைஉரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

  • திருக்குறளில்இடம்பெறாதஒரேஎண்- ஒன்பது.

  • திருக்குறளில்கோடிஎன்றசொல்ஏழுஇடங்களில்இடம்பெற்றுள்ளது.

  • எழுபதுகோடிஎன்றசொல்ஒரேஒருகுறளில்இடம்பெற்றுள்ளது.

  • ஏழுஎன்றசொல்எட்டுக்குறட்பாக்களில்எடுத்தாளப்பட்டுள்ளது.

  • திருக்குறள்இதுவரை 26 மொழிகளில்வெளிவந்துள்ளது.

  • திருக்குறளைஆங்கிலத்தில் 40 பேர்மொழிபெயர்த்துள்ளனர்

  • திருக்குறள்நரிக்குறவர்பேசும்வக்போலிமொழியிலும்மொழிபெயர்க்கப்ப
  • ட்டுள்ளது.

நீள்ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடிவைத்தது உண்மைதானா…இல்லை வழக்கமான ஆங்கில படங்கள் மாதிரியானதா?


இந்தக் கட்டுரை அமெரிக்கா உண்மையிலேயே நிலவிற்கு மனிதனை அனுப்பியதா??அல்லது உலகை ஏமாற்ற உருவாக்கிய கட்டுக்கதையா என்பதை முழுக்க முழுக்க விளக்கும்பதிவு.. உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்மசகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்துகொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்பவைத்து இருக்கிறார்கள் 
உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன்தான். 1930 ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். 
அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன், 
1957 – ஆம் ஆண்டு விண்களத்தில் ”லைகா” என்ற நாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர். ”லைகா” நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது .இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை நிலவிற்கு அனுப்பிசோதனை செய்ய முயற்சித்தது 
அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக் கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டு விட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல்
இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறிமன்னிப்பும் கேட்டனர். அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பிசெய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர். 
அந்தகாலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப்பற்றிய சோதனையிலும் போட்டிப் போட்டது. நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், ”அவர்களால் செய்ய முடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்துகாட்ட முடியும்” என்று அமெரிக்கா சவால் விட்டது.
அதன் பிறகுதான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்தநாடு என்று காட்டுவதற்காக, கடந்த 1969 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் ”அப்போலோ – 11” என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 – ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள்ஆம்ஸ்ராங்தான் முதன்முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு ”நிலாவில்முதன் முதல் காலடி வைத்தவர்யார்…?” என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது.

அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம்தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ”நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த” திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.
அவர்கள் சொன்னது என்ன வென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலகமக்களைஎப்படியெல்லாம்அமெரிக்காமடையர்களாகஆக்கியிருக்கிறதுஎன்றுஎன்னும்போதுநமக்கெல்லாம்உண்மையிலேயேகோபம்வருகிறது.

”ஹாலிவுட்டில்நிலாவைப்போன்றுசெட்டிங்ஸ்போட்டுபடம்எடுத்தவர்என்கணவர்தான்” என்றஉண்மையையும்அந்தபடத்தைஇயக்கியஅன்றைய ”science fiction” படஇயக்குனர்ஸ்டான்லிகுப்ரிக் – இன்மனைவியும்வெளியிட்டிருக்கிறார்.
அப்படிஎடுக்கப்பட்டதிரைப்படத்தில்நிறையவிஷயங்களைகோட்டைவிட்டிருக்கிறார்கள்என்பதையும்பார்த்தால்உங்களுக்குஉண்மைவிளங்கும்.

1) முதலாவதுநிலாவில்வெளிச்சமேஇருக்காது. சூரியனின்ஒளிபட்டுதான்பூமியிலிருக்கும்நமக்குநிலாவெளிச்சமாகதெரிகிறதேஒழிய, தானாகநிலாவில்எப்படிவெளிச்சம்வரும். அங்கு street light எல்லாம்கிடையாது.

2 )நீள்ஆம்ஸ்ட்ராங்நிலாவில்இறங்கிஅமெரிக்கக்கொடியைநிலாவில்நடுவார். அப்போதுஅந்தக்கொடிஅசையும். காற்றேஇல்லாதஇடத்தில்கொடிபறப்பதற்குசாத்தியமேஇல்லை.

3 )அதேப்போல்காற்றேஇல்லாதஇடத்தில்கால்தடம்பதிக்கநடப்பதுஎன்பதும்இயலாததே. அப்படியிருக்கையில்அவர்கள்நடந்தகாலடித்தடம்இருக்கும். அவர்கள்நடக்கும்போதுபுழுதிபறக்கும். இதெல்லாம்நிலாவில்எப்படிமுடியும்.

4 )சுற்றிலும்focusலைட்போட்டுபடபிடிப்புநடத்தப்பட்டதால், அந்தநிலாவில்உள்ளபொருட்களின்நிழல்கள்ஒவ்வொன்றும்ஒவ்வொருகோணங்களில்இருக்கும்.

5 )நீள்ஆம்ஸ்ட்ராங்கின்முகத்தைஅருகில்காட்டுவார்கள்அதில்அவருக்குஎதிரில்இருக்கும்விண்வெளிவீரர்கள்இரண்டுபேரின்உருவங்கள்தெரியும். நிலாவிற்குசென்றதேஇரண்டுபேர்எனும்போதுமூன்றுவதாகஇன்னொருவர்யார்…?

இப்படியாகஅந்தபடபிடிப்பில்கோட்டைவிட்டிருப்பதால்அமெரிக்காநிலாவிற்குசெல்லவில்லைஎன்றும், நிலாவிற்குசென்றதுபோல்ஹாலிவுட்டில்எடுக்கப்பட்டதிரைப்படமேஅதுஎன்றும்விண்வெளிஆராய்ச்சியாளர்கள்உறுதிசெய்திருக்கிறார்கள்.

இவ்வளவுஅறிவியல்வளர்ச்சியும், அறிவியல்தொழில்நுட்பவளர்ச்சியும்உள்ளஇந்தகாலத்திலேயேஅமெரிக்கா, இந்தியா, சீனாஉள்ளிட்டபலநாடுகள்இன்றைக்குநிலாவைப்பற்றியஎந்தவிதமானமுழுமையானமுடிவுக்கும்வரமுடியாமலும், நிலாவிற்குஆட்களைஅனுப்பயோசித்துக்கொண்டும்இருக்கிறார்கள்.

அன்றைக்கு – அதுவும் 60 – களில்இன்றைக்குஇருப்பதுபோன்றஅறிவியல்வளர்ச்சியோ, தொழிநுட்பவளர்ச்சியோஇல்லாதநாட்களில்எப்படிநிலாவிற்குஆட்களைஅனுப்பினார்கள்..? என்றுநாம்யோசித்தாலேஇவர்களின்மக்களைமடையர்களாக்கும்வேலைபுலப்பட்டுவிடும்.

இனிமேல்உங்களிடம்யாராவதுநீள்ஆம்ஸ்ட்ராங்கைஅமெரிக்கநிலவுக்குஅனுப்பியதுஉண்மைஎன்றால்அதற்க்குமுன்பேநாங்கள்ஒருபாட்டியைவடைசட்டியோடுநிலவுக்குஅனுப்பிவிட்டோம்.கடந்த 60 வருடத்திற்குமேல்அந்தபாட்டிநிலாவில்வடைசுட்டுவியாபாரம்செய்துவருகிறது.அவரைஉங்கள்ஆம்ஸ்ட்ராங்பார்த்தாராஎன்றுவிசாரியுங்கள்


நன்றி..

Tuesday, March 4, 2014

இவர்களெல்லாம் யார் என்று தெரியுமா ?


05.06.2008 - பரமக்குடி திருச்செல்வி
06.07.2008 -கோவை சிற்றரசு
05.12.2009 - பழனி ஸ்ரீ பிரியா
23.06.2010 - ஈரோடு இளங்கோ
05.08.2011 - தர்மபுரி சுகன்யா
01.09.2011 -திருவண்ணாமலை துரை
19.12.2012 -கடலூர் கோபாலகிருஷ்ணன்
04.07.2013 -தர்மபுரி இளவரசன்

சாதி விட்டு சாதிக் காதலித்த ஒரே காரணத்திற்காக , கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள் .

இளவரசனுக்கு வருந்தும் அதே நேரத்தில் ,இனி சாதியின் பெயரால் , காதலர்கள் யார் உயிரும் போகாமல் தடுக்கஎன்ன செய்யப்போகிறோம் , என்பதை தீர்மானிப்பதே முக்கியம்.

# சட்டம் ,சமூகம் ,படைப்பாளிகள் என்ன செய்யப் போகிறோம் ஸ்டேடஸ் போடுவதைத் தவிர ?

இவிங்க எல்லாம் ஒன்னு சேந்துதான்
சர்வதேச சமூகத்தின் உதவியோடு
ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம் வாங்கி தரபோறாங்க....
தமிழனின் இளிச்சவாய்த்தனம் பகுதி - 2



KFC க்கோ MERRYBROWN க்கோ போனா பொரிச்ச சிக்கன் பீஸ்களோட ஒரு கோக்கையும் கொண்டுவந்து வைக்கிறாங்களே ஏன் தெரியுமா?

வயித்துக்குள்ளாற போன சிக்கன் பீஸ் எல்லாம் சீக்கிரம் செரிமானம் ஆகனும்கிறதுக்குத்தான்.. ஆனா இதுல ஒரு பியூட்டி என்னென்ன சிக்கன் துண்டுகளை மட்டுமே செரிக்கவைக்கும் தன்மை கொண்டது கோக்.. ஆனா சிக்கன்ல இருக்கிற கொழுப்பு சாப்பிடறவங்க வயித்துலேயே அப்படியே தங்கறது நிறைய பேருக்குத் தெரியாது..

இது எப்படி இருக்குன்னா டாய்லட்டை ஆசிட் ஊத்தி கழுவி க்ளீன் பண்ற மாதிரி.. ஆசிட்ட ஊத்தினதும் கறை எல்லாம் உடனே போய் பளிச்சென்று ஆவதுபோல, கோக் குடித்தவுடன் சரியான முறையில் சிக்கனில் உள்ள சத்துக்கள் (கொழுப்பு நீங்கலாக) உடலுக்குள் செல்லாமல் அப்படியே வயிற்றுக்குள் போய் விழுந்த உணவை செரிமானத்துவிடச் செய்வது தான் இந்த கோக்கோட வேலை.. கொழுப்பு மட்டும் அப்படியே உடலில் தங்கி பின்னாளில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரியா மல் நிறைய பேரு சிக்கனை 10 மணிக்கு மேல சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போய் தூங்கப்போயிடறாங்க.. அவங்களோட வருங்கால நிலைமை என்னாகும்னு யாரும் யோசிச்சுப் பார்க்கிறதே இல்ல..

இதுபோன்ற மேலை நாட்டு உணவு வகைகள் உடலுக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் நாகரீகத்திற்காக பணத்தையும் செலவழித்து உடலையும் கெடுத்துக்கொள்கின்றார்கள் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள்

#  உலகில் 70 விழுக்காடு மக்கள் விரும்பும் உணவுப் பொருள் மசால் தோசை
# பிறந்து மூன்றே மாதம் ஆன சிறு குழந்தைக்கு கூட ஏற்க்கும் மிகச் சிறந்த உணவு என்று ஆவியில் வேகவைத்த “இட்லி” மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது 

இருந்தும் நாம் ஏன் வியாபார ரீதியில் இதனை கொண்டு சென்று வெற்றி அடைய முடியவில்லை??? யோசியுங்கள் சகோதரர்களே....

வெளிநாட்டவன் காய்ந்த மைதா மாவு ரொட்டியை பீட்சா என்று விற்று கோடிக்கனக்கில் பணம் பன்னுகிறான்.
கோக், பெப்சி விற்க்கும் அளவிற்க்கு நாம்மூர் பாணங்களும், இளநீரும் விற்பதில்லையே..
பெரும்பாலான பாரம்பரிய உணவுப் பண்டங்கள், நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டு இருக்கிறது. 
அடையாளத்தை இழப்பது அவமானம், ஆரோக்கியத்தை தவிர்ப்பது ஆபத்து.

தமிழனின் இளிச்சவாய்த்தனம் உணவுப் பொருள்கள் வியாபாரத்தில் கூட இருக்கிறது...

தமிழ்நாட்டில் தமிழன் பிழைக்க மனம் திறங்கள் உதவிடுங்கள்.. 
மாற்றத்தை நாம் தான் கொண்டுவர வேண்டும்.

-தொடரும்
     பாமரன்...

Sunday, March 2, 2014


இந்தியாவின் சுதந்திர தினம் மறைக்கப் 

பட்ட உண்மை....




ஆகஸ்ட் 15 என்றால் நமக்கு நினைவிற்கு வருவது இந்தியாவின் சுதந்திர தினம் என்று,

இந்த ஆகஸ்ட் 15ம் தேதியின் வரலாறு உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் மிக

ப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது, இனி மேல் நம்மால் எந்த ஒரு நாட்டையும் ஆள முடியாது என உணர்ந்தனர்,

இனிமேல் இந்தியாவை ஆள முடியாது, இந்தியாவை விட்டு விட வேண்டும் என்று உணர்ந்து சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தனர்.

காங்கிரஸ்காரர்கள் சுதந்திரம் கேட்ட தினம் 1948 ஜனவரி 26,

ஏன் என்றால் திலகர் காலத்திலிருந்து (1888) ஜனவரி 26, ஆவது தினத்தை ஆண்டு தோறும் அவர்கள் சுயராஜ்ய தினமாக கொண்டாடி வந்தார்கள்.,


இந்த நிலையில் மவுண்ட் பேட்டன் என்பவன் ஜுன் 3ஆம் தேதி ஒரு அறிக்கையை கொண்டு வந்தான். அதன் படி இந்தியா , பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினம், இதனை இந்த இரு நாடுகளும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினான்.


ஏன் இந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு அப்பிடியொறு முக்கியத்துவம்? என்று பார்த்தால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பிரிட்டனிடம் சரணடைந்த தினம் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிஅதனை இந்த இரு நாடுகளும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமாம்,


தன்மானமுள்ள பாகிஸ்தான் அதனை கொண்டாடமல் ஒரு நாள் முன்னதாக 14ஆம் தேதி கொண்டாடுகிறார்கள்.

ஆனால் இந்தியா மானங்கெட்டுப் போய் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை 1947லிருந்து இன்றுவரை முழுப் பாதுகாப்போடு இன்று வரை கொண்டாடி வருகிறது,

இதை விட ஒரு வெக்கங்கெட்ட செயல் வேறு எதுவும் இல்லை.

இதனை என்றுவரை நாம் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறோமோ அன்று வரை நமக்கு தேசபக்தி என்பது மருந்துக்கு கூட இராது.

உண்மையை உணர்வோம்!

Friday, February 28, 2014

தமிழ் தேசிய தலைவரை பற்றி ஒரு சிறு குறிப்பு

என் உயிருக்கு இனிப்பான தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ...!

தமிழ் தேசிய தலைவரை பற்றி ஒரு சிறு குறிப்பு 

அந்த இளைஞன் ஒரு அரசாங்கத்தை எத்ர்த்துப் போராடலாம் என்று முடிவெடுத்த போது அந்த இளைஞனின் வயது வெறும் பதினெட்டு தான். தான் எதிர்க்கப்போவது ஒரு தனி மனிதனையோ அல்லது சிறிய குழுக்களையோ அல்ல, தான் எதிர்க்கபோவது ஒரு நாட்டின் இராணுவத்தை என்று நன்றாகஉணர்ந்திருத்த அந்த இளைஞன் அதற்காக வைத்திருந்த ஒரே ஒரு ஆயுதம் ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கி மட்டுமே.

ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கியை மட்டுமே ஆரம்பத்தில் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்க்க துணியும் தைரியம் அந்த இளைஞனை தவிர வேறு யாருக்கும் வந்து இருக்காது.

அன்று அந்தப் பழைய துப்பாக்கியை மட்டுமே வைத்துக் கொண்டு, இரண்டு மூன்று நண்பர்களுடன் மட்டுமே தனது போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அன்றிலிருந்து சரியாக முப்பது வருடங்களின் பிறகு, தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டு, முப்படைகளையும் கொண்ட ஒரு மரபு ரீதியான இராணுவமாக தனது படை பலத்தை யாருமே கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு மாற்றி காட்டினான்.

அன்று இலங்கை என்ற ஒன்றே ஒரு நாட்டிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அதன் பிறகு வந்த முப்பது வருடங்களில், நேரடியாக பதினாறுக்கும் மேலான நாடுகளையும், மறைமுகமாக முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளையும் தனித்து எதிர்கொண்டு, யாருக்கும் தலைவணங்காது, யாருக்கும் அடிபணியாது வீரத்துடன் போராடி, வரலாற்றின் பக்கத்தில் தனது பெயரை ஆழமாக பதிவு செய்து கொண்டான்.

நாம் கதைகளில் மட்டுமே படித்த மாவீரர்களின் வீரத்தினை நமது கண்முன்னால், நிகழ்த்தி காட்டி இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத வரலாறாக மாறி விட்ட அந்த வீரன் வேறு யாரும் இல்லை. தமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன், மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.



Wednesday, February 26, 2014

சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்...!

சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்...!

மனிதநேயம் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் பகிர வேண்டிய பதிவு....!

இது நம் நாட்டின் சாபக்கேடு, தயவு செய்து பிறர் அறிய பகிருங்கள் நண்பர்களே..

உள்நாட்டில் எல்லா வசதிகளும் வேலை வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் வெளிநாட்டில் தன் குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக கனவுகளைச் சுமந்துகொண்டு விமானமேறி வெளிநாடு செல்லும் இந்தியர்களில் தமிழக தென்மாவட்ட ஏழை விவசாயிகளே அதிகம். அவ்வாறு சென்றவர்களில் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் மலேசியா, சிங்கை, அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்.

அவ்வாறு இறந்தவர்களில் பலர் "சுமந்து சென்ற கனவுகளோடு அந்தந்த நாடுகளில் உள்ள சுடுகாட்டில்" அழுவதற்குக் கூட ஆளின்றி, முறைகள் செய்ய உறவின்றி புதைக்கப்படுகிறார்கள்.

பலர் "செல்லும்போது விமானச் சீட்டில் பயணம் செய்தவர்கள், திரும்பும்போது பெட்டிகள் அடுக்கும் பகுதிக்குள் மரப்பெட்டிக்குள் வைத்த பிணமாய்" கார்கோவிற்கு வந்து சேர்கிறார்கள்.

அவ்வாறு வந்து சேரும் கார்கோவிற்கு இங்குள்ள உறவுகள் சென்று உடலை எடுத்து வரவேண்டும். எந்த நாட்டில் இருந்து அந்த உடல் அனுப்பப்ப்டுகிறதோ அந்த நாட்டில் இருந்து அனுப்புவதற்கு முதல்நாள் அவர்களின் வீட்டிற்கு "உறுதிப்படுத்தும்" அலைபேசி சென்னை கார்கோவில் இருந்து வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வாறு கார்கோவில் இருந்து அழைப்பவர்கள் "வரும்பொழுது பத்தாயிரம் ரூபாய்"
செலவாகும் எடுத்துவாருங்கள் என்றும் சொல்கிறார்கள்.


எதற்காக இந்த பத்தாயிரம் ரூபாய் ? லஞ்சமாம்!

ஆம்... இதனை கொடுக்கவில்லையேல், பெரும்பாலும் இரவிலேயே விமானங்கள் வந்து சேர்வதால், உடலை எடுக்கச் செல்பவர்களுக்கு அங்கே அலைக்கழிப்புத்தான் மிஞ்சும். இரவில் எடுக்க முடியாது காலையில் வாருங்கள் என்றும், பல பரிசோதனைகள் செய்யவேண்டும் என்றும், காவல்துறையில் சென்று புகார் கொடுத்து அதன் நகலை எடுத்து வாருங்கள் என்றும் துக்கத்தோடு காத்திருக்கும் குடும்பத்தினரை மேலும் கொடுமைப்படுத்து கிறார்கள்.

அதேசமயம் அங்கே இருக்கும் சில ஏஜெண்டுகளின் எண்களையும் அவர்களே தந்து, அந்த ஏஜெண்டுகளிடம் பணத்தைக் கொடுத்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் "உடல் பெட்டி" வந்துவிடுகிறது.

அந்த கார்கொவில் பணிபுரியும் அதிகாரிகள்தான் இவ்வளவு சித்து வேலையும் செய்யும் நல்ல பிறப்புப் பிறக்காத நாய்கள். அட பிணம் திண்ணி கழுகுகளா எதுக்குடா இந்த பணம். உங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்காங்கதானே.நீங்க நல்ல சாவு சாக மாட்டிங்கடா. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட உறவுகள்.

தன் மகன் வெளிநாட்டிற்கு போகிறான். தங்கச்சிய கரை சேத்துடலாம்... சின்னதாவாவது ஒரு வீடு கட்டிவிடலாம்.னு ஆசையோட காத்திருக்கும் குடும்பத்தினருக்கு "போன கடன் தீர்க்கும் முன்னே செத்துப்போன பிள்ளையின் உடலையாவது பார்ப்போமே" என்று கண்ணீரோடு காத்திருக்கும் அந்த குடும்பம் சென்னை விமான நிலையத்தில் இப்படிப் படும்பாடுகளை சொல்லி மாளாது வேதனைக்கு மேல் வேதனையை அனுபவிக்கிறார்கள்
இந்த செய்தி எல்லாருக்கும் சென்று சேர வேண்டும். எங்காவது ஒரு நல்ல அதிகாரிக்கு, ஒரு நல்ல மனசாட்சி உள்ள அமைச்சருக்கு, ஆளும் அரசுக்கு இந்த செய்தி சென்று சேரும். இனியும் இது தொடரக் கூடாது. பகிருங்கள் நண்பர்களே...! உங்களின் பங்களிப்பு இதில் அவசியம்..!



சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்

உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

நன்றிகள்.

தமிழ்ச்சகோதரர்கள்

தமிழன் ஒரு ஏமாளி

நண்பர்களுக்கு வணக்கம்...

இந்த வாரம் தாரளமயமாக்கல் என்ற பெயரில் தமிழன் எப்படியெல்லாம் ஏமாற்றப்ப்ட்டு இருக்கிறான் என்பதை பார்ப்போம்
#தமிழனின் இளிச்சவாய்த்தனம்#

#உங்களுக்கெல்லாம் தெரியுமா நண்பர்களே நாம் பயன்படுத்தும் சிம் கார்டில் இருந்து, ரீசார்ச் கூப்பன் வரையில் 
தமிழ்நாட்டில் தான் அதிகவிலையில் விற்க்கிறார்கள். BSNL, AIRTEL, AIRCEL, VODOFONE, IDEA, DOCOMO இப்படி அனைத்து
#Reacharge coupens, Rate Cutter, Booster Pack என அனைத்துமே தமிழகத்தில் தான் அதிகவிலை.

எடுத்துகாட்டாக: கர்நாடகா & கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் 30-ரூபாயில் இருந்து Full Talk time.
ஒரு மாததிற்கு Rate Cutter 25-ரூபாயில் இருந்து ஆரம்பிகிறது தமிழ்நாட்டில் ரேட்கட்டர் ஒரு மாதத்திற்க்கு 60-ரூபாக்கு மேல் தான்.
இந்த மொள்ளாமாரி தனத்தை அனைத்து நட்வொர்க் கம்பெனிகளும் செய்கிறது.

#பாரத ஸ்டேட் பேங்க் SBI (State Bank Of India)
இதன் மாநிலம் சார்ந்த கிளைகள் அந்ததந்த மாநிலத்தின் பெயரிலேயே இருக்கிறது உதாரணம் இதோ.
#SBM (State Bank Of Mysore)
#SBH (State Bank Of Hydrabad)
#SBT (State Bank Of Tiravangore)
#SBP (State Bank Of Punjab)
ஏன் State Bank Of Tamilnadu இல்லை. 

இதில் மிகவும் கொடுமை என்னவென்றால்.
மேலே கூறிய அனைத்து மாநிலப் பெயர் கொண்ட வங்கிகளுக்கும் தமிழகத்தில் கிளைகள் இருக்கிறது.

#கெயில் நிறுவனம் ஆந்திராவில் இருந்து கர்நாடகவிற்கு கேஸ் (Gas) எடுத்துச் செல்ல தமிழக விவசாய நிலங்களின் வழியாக எடுத்து செல்கிறது.
இதனால் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகளின் விளைச்சல் நிலம் வீணடிக்கப்பட்டுள்ளது.

#விவசாயிகள் நீதிமன்றத்தில் முறையிட்டதற்கு???

#கேஸ் குழாய் பதிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று தீர்ப்பு வழங்கி பணமுதலாளிகளை காப்பாற்றி இருக்கிறது.

#இதே கெயில் நிறுவனம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் விவசாயிகளின் மிரட்டலுக்கு பணிந்து “தேசியநெடுஞ்சாலைகளின் ஓரமாக குழாய்களை பதித்து செல்கிறது.

#சென்னை மாநகரின் காவல் ஆணையர் (City Commisioner) கேரளத்தை சேர்ந்த ஜார்ஜ் அவர்கள்.

#கேரளாவில் இப்படி ஒரு தமிழனை உயர்பதவிகளில் வைப்பார்களா????

இந்த கட்டூரையின் மூலம் நான் தெளிவு படுத்த விரும்புவது.
தமிழர்கள் மற்ற மாநில மக்களுக்கு எதிரிகள் அல்ல ஆனால் மற்ற மாநிலங்கள் எங்களை சமமாக மதிப்பது இல்லை என்பதே உண்மை.
மற்ற மொழிபேசும் மாநில நண்பர்களை நாங்கள் கேட்டுகொளவது ஒன்றுதான். தமிழன் என்பதை மறந்து மேலே கூறியதை மனசாட்சியுடன் கொஞ்சம் படித்து உணர்ந்து பாருங்கள்.

எங்களின் வலி உங்களுக்கும் புரியும்...
மற்ற மாநிலத்தவருக்கு இது சாதாரணம்..
ஆனால் தமிழனுக்கோ சதா...ரணம்

சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்

உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

நன்றிகள்.
தமிழ்ச்சகோதரர்கள்


Tuesday, February 25, 2014

இந்தியாவின் டீசல் தன்மை - கொடூரம்

நண்பர்களுக்கு வணக்கம் ..

இந்த வாரம் ஒரு மற்றும் ஒரு புதிய அதிர்ச்சி தகவலுடன் வந்து இருக்கிறேன்.

#இந்தியாவில் பயன்படுத்தப்படும் டீசல் அதிக தீப்பற்றும் தன்மையுடன் இருக்கிறது. என்ன தீப்பற்றும் தன்மை????

மற்ற நாடுகளை விட இந்தியாவில் பயன்படுத்தும் டீசல் தான் மிக விரைவில் தீப்பற்றும் தன்மையும் அதிக புகையும் கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்ற நாடுகளில் “Flame Flash Point level 5 to 8" வரை இருக்கிறது. இந்தியாவிலோ Flame Flash Point level 1 to 4 -க்குள் இருக்கிறது

இதற்க்குக் காரணம் “நாப்தல்” என்ற இனைபொருள் டீசல் தயாரிப்பில் அதிக அளவில் சேர்க்கப் படுவதே.
தனியார் இந்திய எண்ணை தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களின் சுய லாபத்திற்க்காக இப்படி செய்கிறது.

இதனால் மனிதருக்கும் வாகனங்களுக்கும் ஏற்ப்படும் விளைவுகள்????
#வாகனங்களில் இது போல அதிக கரித்தன்மை கொண்ட எரிபொருள் பயன்படுத்துவதால் சீக்கிரமே உங்கள் வாகனத்தின் எஞ்சின் பாழாகும்.
#குறிப்பாக ஒரு வாகனம் 5 வருடங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் என்றால்..?
இந்த டீசல் போடுவதால் அதிகபட்சம் 2 வருடங்களுக்குள் எஞ்சின் பாழாகி உங்களுக்கு செலவுவைக்கும்.
#இந்த எரிபொருள் தான் இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் பெரும்பாலான பேருந்துகள் விபத்து ஏற்ப்பட்ட உடன் எளிதில் தீப்பிடித்து அதிக உயிர்கள் பலியாகின்றது.
சமீபத்தில் ஆந்திராவில் சொகுசுபேருந்து தீப்பிடித்து 100-க்கும் மேற்பட்டோர் பலியானது செய்திகளில் பார்த்தோம்..
இதில் வெட்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் இந்த டீசல் விவகாரம் மத்திய அரசுக்கு தெரியும்.
எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் சுய லாபத்திற்காக மனித உயிகளோடு விளையாடி வருகிறது.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல். 
பொங்கும் ஊழல் புதுமை ஊழல் என
தினம் தினம் புது புது ஊழல்கள்.
யப்பா முடியல சாமீ என்று மக்களே வெறுக்கும் அளவுக்கு செய்துவிட்டது இந்த பாழாய்போன மத்திய அரசு.

சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்
உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள் 

அரசியல் மற்றும் சமூகம் மீதான என் பார்வை - பகுதி-2

அரசியல் & சமூகம் மீதான எண் பார்வை

*2014-ல் பொதுத்துறை வங்கிகள் தனியார்மைய மாக்கப்படும்*
*அனைத்து விமானநிலையங்களும் தனியார் வசம் கொடுக்கப்படும்*

இதற்கான ஏற்பாடுகள் & வரைமுறைகள் முழுமையாக முடிந்து விட்டது 2014-ல் இது முழுமையாக நடைமுறை படுத்தப்படும்.

முதலில் தனியார் மயமாக்கல் என்பது என்ன..???

அரசு இயந்திரம் தன்னால் நிர்வகிக்க முடியாத ஒரு நிறுவனத்தை தனியார் வசம் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டும் கொடுத்து லாபம் ஈட்ட எடுக்கும் ஒரு சட்ட நடவடிக்கை.
ஆனால் அரசு இன்று எதை எல்லாம் தனியாரின் கைகளில் கொடுத்து இருக்கிறது???
#கல்வி#
#மருத்துவம்#
#பெட்ரோலியத்துறை#
#நெடுஞ்சாலைத்துறை#
#ஆயுள்காப்பீடு (இன்சுரன்ஸ்)#
#வங்கிகள்#
இன்னும் இந்தப் பட்டியல் இருக்கிறது இப்படி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அனைத்து துறைகளையும் தனியார்வசம் கொடுத்து விட்டால் நாட்டின் பணவீக்கம் 80 என்ன 200 ரூபாய் கூட ஆகலாம்.

*ஒரு சில துறைகளை தனியாரிடம் கொடுத்து விட்டு. மக்கள் பயன்பெறும் பொதுத்துறை நிறுவனங்களான கல்வி, மருத்துவம், பெட்ரோலியம், ஆயுள் காப்பீடு போன்றவைகளை அரசு நடத்தி இருக்கலாம்.

*வளர்ந்த நாடுகளில் எல்லாம் மேலே கூறிய அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டிலே இயங்கி வருகிறது. அப்படி இயங்கியதால் மட்டுமே அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அந்நாட்டுகளில் வளர்ந்து இருக்கிறது.
#நம்முடைய இப்போதைய இந்த அரசியல், பொருளாதரம் மற்றும் சமூக அமைப்பு #

*லட்சாதிபதியை கோடிஸ்வரனாக மாற்றுகிறது,

*நடுத்தர மக்களை ஏழைகளாக மாற்றுகிறது,

*ஏழைகளை ஒருவேளை சோற்றுக்கு போராட வைக்கிறது.

*இதற்கு கீழ் நிலையில் இருப்பவர்களை பற்றி சொல்லவே வேண்டாம் ஏன் என்றால் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் மாநகர டிராபிக் சிக்னலிலும் தினமும் இவர்களை கடந்தே நாம்போக வேண்டும்.

*சுதந்திரம் பெற்று இந்த 67-ஆண்டுகளில் நம்நாடு முன்னேறவில்லை என்பதற்கு இவர்களே உயிருள்ள சாட்சிகள்.

*உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் உலகின் தலைசிறந்த 200 பல்கலைழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இருந்து தேர்வாகவில்லை.

*ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதல் 5 இடத்திற்குள் வருகிறது

*எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் வருகிறது.

*சுகாதரமான நாடுகளின் பட்டியலில் 157-வது இடத்தில் இருக்கிறது

இதெல்லாம் நமக்கு சிறப்பா?? ஒரு கனம் சிந்தியுங்கள் நம்நாடு எதை நோக்கி பயனிக்கிறது நம் சமூகம் என்ன நிலைக்கு இதனால் தள்ளப்படும் தெரியுமா???
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்து விடுவேன் என்ற பாரதியின் வாக்கு பொய்யாகி. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் அவனை கொன்றுவிடுங்கள் என்ற நிலை மிக விரைவிலேயே வரும். மனிதம் மறந்தால் நாம் மனிதர்களாய் வாழ தகுதியற்றவர்கள்.

பணம் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியம் ஆனால் நம் சமூகம் என்பது வெறும் பணத்தால் மட்டும் கட்டமைக்கப்பட்டது அல்ல உறவுகள், சாதி, பாரம்பரியம், பண்பாடு இவை அனைத்தையும் சேர்த்து பின்னப்பட்டது
இன்று நாம் பணத்தேடலில் அனைத்தையும் இழக்கிறோம். நமக்கென்று  தனி வரலாறு இருக்கிறது. நமக்கென்று உலக வரலாற்றில் தனி அடையாளம் இருக்கிறது. அடையாளத்தை இழந்து ஆடம்பரத்தை எதிர்பார்ப்பது அவமானம்.

மாளிகை வீடு, கோடிகோடியாய் பணம், தங்கத் தட்டில் சோறு, இவையெல்லாம் கொடுத்து தனியாய் யாரும் இல்லாத காட்டில் வாழவேண்டும் என்றால்  நம்மால் முடியுமா???
கண்டிப்பாக முடியாது. வெற்றியை கொண்டாட நமக்கு உறவுகள் & நட்புகள் வேண்டும், அப்படி யாரும் இல்லாத வெற்றி தோல்வியை விட கேவலமானது. நான் ஜெயித்தேன் என்பதை விட யாரும் தோற்கவில்லை என்பதே சாலச்சிறந்தது.
அதற்க்காக உங்களை எல்லாம் புத்தனாகவோ, காந்தியாகவோ மாறச் சொல்லவில்லை நம் சமூகம் எதை நோக்கி பயனிக்கிறது என்பதை உங்கள் கண்முன் நிறுத்தும் ஒரு சிறு முயற்ச்சியே இந்தப் பதிவு.
இறக்கத்தான் பிறந்ததோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்ற அன்னை தெரசாவின் வரிகளை பின்பற்றினேலே போதும்.

சமூகம் அரசியல் மீதான என் குரல் பதிவுகளின் வழியாக ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்

உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள் 

அரசியல் மற்றும் சமூகம் மீதான என் பார்வை

நண்பர்களுக்கு வணக்கம்...

அரசியல் மற்றும்  சமூகம் மீதான என் பார்வை 

சமீபத்திய செய்திகளில் இருந்தே ஆரம்பிப்போம்

#ரயில் பரமரிப்பு & பயணக் கட்டணம் ஊழல் ரூபாய்:500,000,000,000 (ஐம்பதாயிரம் கோடி)#

புதுசு கண்ணா புதுசு காங்கிரஸின் அடுத்த கட்ட ஊழல் சாதனை ஆரம்பம். எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளி செய்யவும், வெளிநடப்பு செய்து பாராளுமன்றம் நடக்கவிடாமல் செய்யவும் காரணம் கிடைத்து விட்டது இங்கு வீணடிக்கப் பட்டுள்ளது அனைத்தும் மக்களின் வரிப் பணமே என்பதை மறக்க வேண்டாம்

#பிரதமர் மன்மோகன்சிங் வெளிநாட்டு பயணச்செலவு கடந்த 5 ஆண்டுகள் ரூபாய்:6420,000,000 (642 கோடிகள்)#

வெளிநாட்டுக்கு போய் அப்படி என்ன நாடு முன்னேற திட்டம் கொண்டுவந்தார்??
*எளிமையை அடையாளமாக காட்டிய காந்தி அவர்களின் கட்சியான காங்கிரசாரின் செயல்பாடுகளை பாருங்கள்.

#அமெரிக்கா வெளியிட்டுள்ள ஓன்றுக்கும் உதவாத & செயல்படாத பிரதமர்கள் பட்டியல்#*#இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முதலிடம்#

#உங்களின் தொழில்துறைகளை இந்தியாவில் முதலீடு செய்யதீர்கள் உங்களின் பணம் வீணாய்ப்போகும். பன்னாட்டு நிறுவனங்களிடம் அமெரிக்கா வேண்டுகோள்#

#தாய்மொழியை பயன்படுத்தாதோர் அதை மதிக்காதோர் மாநகரம் பட்டியல்# #சென்னை-க்கு முதலிடம் BBC வெளியீடு#

#பெரியோகளுக்கு மரியாதை கொடுக்காதவர்கள் நிறைந்துள்ள மாநிலம் முதல் இடம் தமிழகம்#

இது பெருமைப்பட வேண்டிய செய்தி அல்ல.

நண்பர்களே ஒரு கனம் சிந்தியுங்கள் நம் பெற்றோர்கள் 1960-களின் இறுதியில் பிறந்தவர்கள் ஆனால் நாம் 1985-களின் இறுதியில் பிறந்தவர்கள் நமக்கும் நம் பெற்றோர்களுக்கும் கிட்டத்தட்ட 20-30 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது ஆகவே நம் வேகத்திற்க்கும், விருப்பத்திற்க்கும் ஏற்றவாறு மாறி வர சற்று நேரம் ஆகலாம், மாறாமலும் கூட போகலாம் அது தவறு இல்லை.

*உங்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை அதற்க்கான தகுதியும் எனக்கில்லை.

*சிறு தகவலை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

*உங்களின் குழந்தை பருவத்தில் நீங்கள் என்னவெல்லாம் மழலைத்தனமாக உளறினீர்களே அத்தனையும் அர்த்தம் புரியவில்லை என்றாலும் அதை ரசித்து கேட்ட முதல் ரசிகர்கள் நம் பெற்றோர்களே. இன்று அம்மா நம் பேரை அழைத்தாலே “என்னம்மா” என்று சலித்துக் கொண்டே கேட்கிறோம் (நான் உட்பட)...

#இங்குள்ள நண்பர்கள் அனைவரிடமும் சில கேள்விகள்# *இதை உங்கள் மனசாட்சி இடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்*

உங்களுக்கு#ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ்# போன்ற நடிகளின் பிறந்த நாள் தெரியும்.

*நம்மில் எத்தனை பேருக்கு தங்கள் அப்பா, அம்மாவின் பிறந்த தினம் நினைவிருக்கிறது???

*உங்களின் பணத்தில் ஒருமுறையாவது பெற்றோருக்காக பிறந்த தினம் கொண்டாடி இருக்கிறீகளா???

*எப்போதாவது அவர்களின் பிறந்த நாளுக்காக புதுத்துணி Surprise'ஆக வாங்கி கொடுத்து இருக்கிறீர்களா???

*எப்போதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா என்று சொல்லி இருக்கிறீகளா???

*ஆனால் காதலர் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறோம் சாக்லேட் கொடுப்பது பேஸ்புக்கில் வாழ்த்து பரிமாறுவது பற்றி சொல்லவே வேண்டாம்..

*ஒரே ஒரு முறை பெற்றோரின் பிறந்தநாளை கொண்டாடித்தான் பாருங்கள் அவர்கள் வேண்டாம் என்று தான் சொல்லுவர்கள் ஆனால் நீங்கள் ஒருமுறை ஆடை வாங்கி கொடுத்தால் பல வருடம் கழிந்த பிறகும் அதை சொல்லி பெருமைப் படுவார்கள். நாம் அந்த வார்த்தைகளில் சொர்கத்தையே காணலாம்.

**பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதிக்காத குடும்பம் உறுப்படாது** -பழமொழி (நல்ல குடும்பமே ஆரோக்கியமான குடும்பத்தின் அங்கம்)

சமூகம் அரசியல் மீதான களை எடுக்கும் என் பணி தொடரும்

உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது.

-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள் 

இந்த 10 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி

நண்பர்களுக்கு வணக்கம்...

இந்த 10 ஆண்டுகால ஆட்சியைப் பற்றி...

தமிழகத்தில ஏதோ ஒரு மாவட்டத்தின் கிராமத்தில் வாழும் பாமரனான நான் என் கருத்துக்களை இங்கே பதிவிட விரும்புகிறேன்...
சமீபத்திய செய்திகளை பார்த்துக் கொண்டு வருகிறோம்
#அமரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபயின் மதிப்பு#
சுதந்திரத்திற்க்கு முன்பே இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக இருந்தது...
சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாக எத்தனை திட்டம்??
எத்தனை வளர்ச்சிப் பணிகள்??
இத்தனையும் போட்டு என்ன பயன்??
இதற்க்கு நாம் ஆங்கிலேயனுக்கு அடிமையாகவே இருந்திருக்கலாம்...
கடனாவது இல்லாமல் இருந்திருக்கும்.
#விவசாயம்#
#கல்வி#
#மின்சாரம்#
#குடிநீர்#
#எல்லை பாதுகாப்பு#
#உள் கட்டமைப்பு#
#மருத்துவம்#
#விளையாட்டு#
#தொழில் நுட்பம்#
இப்படி அனைத்து துறைகளிலும் நாம் பின் தங்கிய நிலைகளில் தான் இருக்கிறோம்.
**மருத்துவ சிகிச்சைக்காக சோனியா அமரிக்கா செல்கிறார்**
அப்போ இத்தனை மருத்துவமனைகள், டாக்டரேட் பட்டம் வாங்கிய பெரிய மருத்துவர்கள் இவர்கள் எல்லாம் சும்மாதான் இருக்கிறார்களா???
அப்படியென்றால் உங்களுக்கே இந்திய மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இல்லை என்றால் எப்படி??
சரி உங்களிடம் பணம் இருக்கிறது நீங்கள் வெளிநாடு செல்வீர்கள் பாமர ஏழை என்ன செய்வான்??
அவனெல்லாம் வாழ தகுதியற்றவனா?? ஆம் என்றால் வாழ தகுதியற்றவனுக்கு எதற்க்கு ஓட்டுரிமை???

உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் இன்னமும் கூட மின்சாரம், பள்ளிக்கூடம், தார்சாலை, கூட்டுறவு கடை, குடிநீர்வசதி, இன்றி எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன.
பவர்கட் என்ற ஒன்று அனைவருக்கும் தெரியும் அதில் அதிகபட்சம் பாதிக்கப் படுவது கிராமங்கள்தான் கிட்டத்தட்ட 20 மணி நேரம் கூட என் கிராமத்தில் பவர்கட் செய்து இருக்கிறார்கள்.

இப்பொது சற்று குறைந்து இருக்கிறது. ஆனால் SkyWalk, (ஸ்கைவால்க்), Express venue (எக்ஸ்பிரஸ் அவென்யு), சரவணா ஸ்டோர், போத்தீஸ், சென்னை சில்க்ஸ் இன்னும் இதுபோன்ற வியபார நிறுவனங்கள் இரவில் அதிகமான அலங்கார விளக்குகளை தங்களின் கடைகளை ஜொலிப்பாக காட்ட அதிகப்படியான மின்சரத்தினை பயன்படுத்துகிறது
இப்படி அதிகப்படியான மின்சாரத்தினை ஒரு நாள் மிச்சப் படுத்தினால் அனைத்து கிராமங்களுக்கும் தங்கு தடையின்றி ஒரு வாரம் முழுவதும் மின்சாரம் வழங்க முடியும் தெரியுமா??

இப்படி மின்சாரத்தினை தேவையில்லமல் வீணடிப்பதாலேயேயும் சரியான முறையில் சேமிப்பு & உற்பத்தியை கையாளாமலும் 1990-களில் லாபத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது 50,000 கோடி கடனில் இருக்கிறது.
#இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் காந்தி#
அப்படி முதுகெலும்பை முறித்துவிட்டு எதை நிமிர்த்த பார்க்கிறது இப்பொதுள்ள அரசு???
நைஜிரீயா, மாம்போ, காங்கோ போன்ற பின்தங்கிய நாடுகளில் கூட புற்றுநோய்க்கான மாத்திரைகள் ரூபாய் 25-ல் இருந்து 200-க்குள் கிடைக்கிறது.
இந்தியாவிலோ குறந்தபட்சம் ரூபாய் 2000-ல் இருந்து 50,000-வரை விலை உயர்ந்து நிற்க்க காரணம் என்ன?? இதை யார் சரி செய்ய முடியும்???

67 ஆண்டுகளாக எந்த துறையிலும் முன்னேற முடியாமல் இருப்பதற்க்கு பெயர்தான் ஜனநாயக மக்களாட்சியா???
இதனாலேயே அரசியலில் யாரை நம்புவது என்பது மக்களுக்கு இன்னமும் புரியவில்லை...
அரசியல் வியாதி நாய்களே ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் மக்கள் உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் ஓட்டு போடவில்லை இவனாவது நல்லது செய்ய மாட்டானா என்ற ஏக்கத்தில் போடுகிறார்கள்....
மறவாதீர்.. ஏக்கங்கள் ஒருநாள் கோபமாய் மாரும் அன்று நீங்கள் எங்களின் காலடியில் பிணமாகவும் ரத்த வெள்ளத்திலும் உயிருக்காக எங்களிடம் கெஞ்சி கொண்டு இருப்பீர்கள்...
நாங்கள் காந்தியை கற்றதை விட நேதஜியை நெஞ்சில் வைத்து நேசித்ததே அதிகம்...

சமூகம் அரசியல் மீதான என் சாட்டை மீண்டும் தொடரும்...
உங்களின் கருத்துகள் வரவேற்கப் படுகிறது

-நன்றிகளுடன்
தமிழ்ச்சகோதரர்கள்